• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Jan 26, 2022

சிந்தனைத் துளிகள்

• எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..
பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..
எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..

• நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறாயோ,
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல
உன்னைத் தயார் செய்து கொள்.

• வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தால்
தோல்விகளை தாண்டி வெற்றியை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்

• முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்..!

• தோல்விக்கான காரணங்கள் இரண்டு:
1.யோசிக்காமல் செய்வது.
2.யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *