சிந்தனைத் துளிகள்
• ஆயிரம் முறை சிந்தியுங்கள்
ஆனால் ஒரேயொரு முறை முடிவெடுங்கள்.
• நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்.
உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள்.
• மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து.
ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து.
• வாழ்க்கையை வகுத்துக்கொள்.
இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்துவிடும்.
• பேச்சு பெரிதுதான் ஆனால்
மௌனம் அதனினும் பெரிது.
• உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன்
எதிலும் தயக்கம் காட்டுபவன்தான்.