தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்கவேண்டும் என ஓபிஎஸ் பேச்சு
சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை நடத்திய சோதனை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு கடமையை செய்து வருகிறது தாங்கள் குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புதுறைக்கு ஊழல் பட்டியலை கொடுத்ததே ஓபிஎஸ் தான் என சொல்லப்படும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.