10 % இடஒதுக்கீடு குறித்து அனைத்துகட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் இபிஎஸ் புறக்கணித்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 % இட ஓதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் 10 % இட ஓதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டி அதிமுக புறக்கணித்துள்ளது.