அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் நாளை காலை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சமீபகாலமாக மோதல் வெடித்த நிலையில் அவர் கோயில்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு சாதகமாக வந்ததை அடுத்து தனது இஷ்ட தெய்வமான ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். மேலும் நாளை அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.