தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண் காவலர்களை வரவேற்று உற்சாகப்படுத்திய காவல் துணை ஆணையாளர்கள்.
தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டு தொடக்க பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி வந்த 57 பெண் காவலர்களை 26-03-2023 ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் .V.R.ஸ்ரீனிவாசன் , மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் திருமதி.G.S.அனிதா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு வரவேற்று உற்சாகப்படுத்தி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.