காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளநிலையில் அடுத்த தலைவர்யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மல்லிகார்ஜூனகார்கே மற்றும் சசிதரூர் மோதுகின்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 10,000காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை முடியும் நிலையில் வரும் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமேமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காந்தி குடும்பத்தின் ஆதரவு கார்கேவுக்கே இருப்பதால் அவரே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் என்று ஆரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.