கோவா சட்டசபையில் உள்ள 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 தம்பதிகள் தனித்தனி தொகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளை (பிப்.,14) தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்கிறது. மாநிலத்தை ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ், புதிதாக கால்பதித்துள்ள ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், புதிதாக ஆட்சி கட்டிலில் அமர ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவா அரசியல் களத்தில் 5 தம்பதிகள் தனித்தனி தொகுதிகளில் களம் இறங்கி உள்ளனர். இந்த தம்பதிகள் யார், இவர்கள் போட்டியிடும் தொகுதி, கட்சிகள் குறித்த விபரங்கள் முழுவிபரம் வருமாறு:
கோவாவை ஆளும் பாஜக சார்பில் 2 தம்பதிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஸ்வாஜித் ரானே, வால்போய் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது மனைவி தேவியா போரியம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேவியாவின் மாமனாரும், ஆறு முறை கோவா முதல்-அமைச்சராக இருந்த பிரசாத்சிங் ரானே காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக இதுவரை வென்றது இல்லை. ஒருவேளை இந்த முறை தேவியா வென்றால் அது வரலாற்றை மாற்றி எழுதும்.
இதேபோல் பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் அதனாசியோ மான்சிரேட்டி போட்டியிடுகிறார். இவரது மனைவி ஜெனிபருக்கு தாலிகா தொகுதியில் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2017 தேர்தலில் ஜெனிபர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேநேரத்தில் பனாஜி தொகுதியில் வென்று முதல்அமைச்சராக இருந்த பாஜகவின் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் அதனாசியோ மான்சிரேட்டி களம் இறங்கி வாகை சூடினார்.
எம்எல்ஏக்களாக உள்ள இந்த தம்பதி காங்கிரஸ் கட்சியில் இருந்து 2019ல் விலகி 8 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தனர். தற்போதும் அதனாசியோ மான்சிரேட்டி-ஜெனிபர் தம்பதிக்கு முறையே பனாஜி, தாலிகா தொகுதிகளில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் பனாஜியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் அதிருப்தி அடைந்துள்ளார். இவர் பாஜக வேட்பாளர் அதனாசியோ மான்சிரேட்டியை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.
மேலும் துணை முதல் மந்திரி சந்திரகாந்த் கவேல்கர், குயிபம் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரது மனைவி சாவித்ரிக்கும் சங்கம் தொகுதியில் வாய்ப்பு கோரினார். ஆனால் சாவித்ரிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால் சாவித்ரி சங்கம் தொகுதியில் சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளார். இத்தம்பதி கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இதில் சங்கம் தொகுதியில் சாவித்ரி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் குயிபத்தில் சந்திரகாந்த் கவேல்கர் வெற்றி பெற்று பாஜகவில் இணைந்தார். அதன்பின் துணை முதல் மந்திரியானார்.
காலன்குட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் லோபா, முதல் மந்திரி பிரமோத் சாவந்த் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தார். கோவாவில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் 2021 டிசம்பர் மாதமே தனது மனைவியும், மாநில மகளிர் அணி துணை தலைவருமான டிலிலா, சியோலிம் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டார். தேர்தல் நெருங்கவே வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. அப்போது சியோலிம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தயானந்த் மன்ட்ரேகரை நிறுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், மைக்கேல் லோபா-டிலிலா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் சீட் வழங்கப்படும் என கட்சி கூறியது.
இதனால் கோபமடைந்த மைக்கேல் லோபோ அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மனைவி டிலிலாவுடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது கால காலன்குட் தொகுதியில் மைக்கேல் லோபாவும், சியோலிம் தொகுதியில் டிலிலாவும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். மேலும் கோவா அரசியலில் புதிதாக கால்பதித்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒரு தம்பதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
கோவா பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கிரண் கன்டோல்கருக்கு அல்டோனா தொகுதியிலும் அவரது மனைவி கவிதா, திவியம் தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறாக 5 தம்பதிகள் கோவா அரசியலில் போட்டியிடுவது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. இவர்கள் அனைவரும் வெற்றி பெறும் பட்சத்தில் மொத்தமுள்ள 40 எம்எல்ஏக்களில் ஒரு பங்கு 10 பேர் தம்பதியாக கோவா சட்டசபைக்கு செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]