• Mon. Jan 20th, 2025

நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்தது – தலைமைத் தேர்தல் ஆணையர்

ByTBR .

Mar 16, 2024

நாடு முழுதும் வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்.

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வங்கிகள் தகவல் அனுப்பும்.

மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது!

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.