• Tue. Mar 19th, 2024

டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Nov 14, 2022

கடந்த வாரம் முதல் டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை பஞ்சாபில் ரிக்டர் அளவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் ஆக பதிவானது. 120 கி.மீ. தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த வாரம் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் கடந்த 9ம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு 6.3 ரிக்டர் ஆக பதிவானது. 2-வது நிலநடுக்கம் நேபாளத்தில் கடந்த 12-ந்தேதி 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *