நடிகர் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று திரைக்கு வர இருக்கும் “வாத்தி” என்ற திரைப்படத்தின் பெயர் ஆசிரியர் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாக உள்ளதால் படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கில் ” சார்” எனும் பெயரிலும் அதே படம் தமிழில் ” வாத்தி” என்ற பெயரிலும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பெயர், ஆசியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும் சொல்லாக உள்ளது என பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த புகார் குறித்து பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசன் புதியதலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு சமுதாயத்தை உருவாக்கும் மிகவும் உன்னதமான சமூகம் ஆசிரியர்கள் சமூகமாகும். அதனால் தான் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கடைபிடிக்கின்றோம். பல்வேறு அரசியல் தலைவர்கள்கூட ஆசிரியர்களாக பணியாற்றி பின்னர் மக்கள் பணியாற்றியுள்ளார்கள். மனித வாழ்வின் தொடக்கத்தில் மாதா, பிதா, குரு என மூன்றாவது அந்தஸ்தில் இருந்து கல்வியை புகட்டி சிறந்த மனிதனாக உருவாக்கும் புனித பணியை மேற்கொள்கின்றனர்.
அந்த ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் தமிழில் மட்டும் தரக்குறைவாக கொச்சையான வார்த்தையில் “வாத்தி” என்று பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளதிரைப்படத்தால் ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் “வாத்தியார்” என்றோ, தெலுங்கில் வைத்தது போல “சார்” என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆசியர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வெளியாகும் இந்த படத்தின் பெயரை மாற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்று பெரும் தலைவர்களாக உள்ளார்கள் அவர்களும் குரல்கொடுக்க வேண்டும்” என சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]