ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் ,,
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி அங்குள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் , தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். கடந்த 18 மாத கால ஆட்சியில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த விளக்கப் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்யப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை குறித்தும் விளக்கி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, “தேர்தல் பணிகளை முன்கூட்டியே துவக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாகவும், ஆட்சியின் சாதனங்களை சொல்லி வாக்கு கேட்பதாகவும் தெரிவித்தார் .மேலும் ,பல்வேறு அமைச்சர்களும் திமுக கழக நிர்வாகிகளும் பிரசாத்திற்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்திற்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் முத்துசாமி தெரிவித்தார். பிரச்சார இடையில் வந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துச்சாமியுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.



வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்தார். திமுக அரசின் ஒன்றரை ஆண்டு சாதனையை வீடு வீடாக விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.கடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக நகர்நல பணிகள் எதுவும் நடைபெறவில்லை.அதனை இந்த ஒன்றரை ஆண்டில் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னமும் வளர்ச்சி பணிகள் நடைபெறும்.அதிமுக மற்றும் எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரத்தை பொதுமக்கள் வாக்கு அளித்து திமுக கூட்டணியை வெற்றி பெற செய்து முறியடிப்பார்கள் என தெரிவித்தார்
வாக்கு சேகரிப்பின் போது திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]