திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை தாலுகா வாணிக்கரையை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னமுத்து தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு சால்வை அணிவித்து தங்களை அதிமுக உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை ஒன்றியம் அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.




