தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆண்டிப்பட்டி வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து தபால் ஓட்டுகள் உள்ள பெட்டியை திறந்து வாக்கு எண்ணிக்கையை துவக்கிவைத்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றார். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக ஒன்பது இடங்களிலும் திமுக கூட்டணி சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இதனால் திமுக கூட்டணியின் மொத்த வெற்றி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது . இதனால் மொத்த பெரும்பான்மைக்கு தேவையான பத்து இடங்களை விட ஒரு இடம் கூடுதலாக பெற்று 11 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியதால் ஆண்டிபட்டி பேரூராட்சி திமுக கூட்டணி வசமானது . இதையடுத்து அதிமுக ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றனர். திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து திமுகவினர் உற்சாகம் அடைந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் மார்ச் 2-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.மார்ச் 4ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து கடந்த ஒரு மாத காலமாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளன.


- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]