• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் புத்தக தொகுப்பு வழங்கல்

இன்று தேனி மாவட்ட ஆய்வுக்காக வந்திருந்த மாநில தகவல் உரிமை ஆணையர் R. பிரதாப் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005-ன் கீழ் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினால் பெறப்பட்ட தகவல்கள் அடங்கிய புத்தக தொகுப்பினை மாவட்ட பொறுப்பாளர் P.முருகேசன் வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை தந்து சிறப்பாக செயல்படுகின்றன என்றும் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேருராட்சியில் கேட்கப்பட்ட விபரங்களை தர மறுத்து அலைக்கழிப்பு செய்வதாகவும் புகார் தெரிவித்தார்.