சேலம் அரசு மருத்துவமனையில் கார் நிறுத்துவதில் துறைத்தலைவருக்கு டாக்டர்-க்கும் தகராறு…. சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ
சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் கார் நிறுத்தும் இடத்தில் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன் ராஜராஜன் மற்றும் உதவி பேராசிரியர் (மயக்கவியல்) மருத்துவர் பிரதீப் ஆகியோருக்கிடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் காண கார் நிறுத்திரத்தில் இன்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் உதவி பேராசிரியர் (மயக்கவியல்) மருத்துவர் பிரதீப் என்பவர் தனது காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார் அப்போது அங்கு வந்த இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன் ராஜராஜன் மருத்துவர் பிரதீப் காரில் இருந்த சக்கரத்தின் காற்றை பிடுங்கிவிட்டு உள்ளார் இது தொடர்பாக அவர் நான் கார் நிறுத்துமிடத்தில் நீ எதற்காக நிறுத்தினாய் அவ்வாறு நிறுத்தனால் அப்படித்தான் செய்வேன் என கூறியதோடு இது தொடர்பாக மருத்துவர் இராஜராஜனை செல்போனில் தொடர்பு கொண்ட பிரதீப் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்டதற்கு இப்படி தான் செய்வேன் என இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.