• Sat. Apr 20th, 2024

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

Byகாயத்ரி

Sep 14, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் . இதனை அடுத்து பள்ளியின் தாளாளர் ஆசிரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 5 பேரின் ஜாமீன் மனு குறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு குறித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதி தாயார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் 5 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *