• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,

ByKalamegam Viswanathan

Jul 24, 2026

மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 முதல் 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை தடகள ஓடுதளத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

24, 25 ஆகிய இரண்டு நாள் போட்டியானது,இளம் தடகள வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச பள்ளிகளில் பங்கேற்க தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க போட்டி அனுபவத்தைப் பெறவும், சிறந்து வழங்குவதன் மூலம், அடித்தள தடகளத்தை வலுப்படுத்தும் ஒரு மைல்கல் முயற்சியாகவும் அமையும் .

பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களின் திறமையை வளர்த்து, தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு ஒலிம்பிக் பெருமையைக் கொண்டுவரக்கூடிய எதிர்கால சாம்பியன்களை உருவாக்குதல் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையால் இந்த தட கள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளையும், 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளன. 4 வயதுப் பிரிவுகளில் (10, 12, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்/சிறுமிகள்) 76 போட்டிகளில் வீரர்கள் போட்டியிடுவார்கள். இது மாநிலத்தின் மிகப்பெரிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும்.