மர்ம முடிச்சுகள் நிறைந்த த்ரில்லர்படங்களில் யார் ஹீரோ என்று பார்ப்பதை விட, யார் குற்றவாளி என கதைக்குள் ஒரு கேள்வி இருந்தாலே போதும் அந்தப் படத்தை ரசிகர்களிடம் ஓரளவிற்காவது கொண்டு போய் சேர்த்துவிடலாம்.
இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கதாநாயகனாக பிரஜின் நடித்திருந்தாலும் படத்தில் உள்ள சஸ்பென்ஸ் இப்படத்தை ரசிக்கக் காரணமாக அமைகிறது.இயக்குனர் பாலாஜி ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.பணி மாறுதல் காரணமாக குற்றாலத்தில் டி 3 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறார் பிரஜின். விபத்தில் பெண் ஒருவர் இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.அதன் தொடர்ச்சியாக பல விபத்துகள் நடந்த விவரம் தெரிய வருகிறது. அந்த விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் போது தனது மனைவியையும் அது போன்ற விபத்தில் பறி கொடுக்கிறார்.எப்படியாவது அந்த விபத்துக்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
முழு படமும் பிரஜின் மற்றும் அவரது விசாரணையைச் சுற்றியே நகர்கிறது. க்ரைம் திரில்லர் என்றாலே அடுத்து என்ன என்ற பரபரப்பு இருக்க வேண்டும்.அது இந்தப் படத்தில் குறிப்பிடும்படியாகவே இருக்கிறது. எத்தனையோ மெடிக்கல் க்ரைம் திரில்லர் படங்கள் இதற்கு முன்பு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் மற்றுமொரு விதமான மெடிக்கல் க்ரைம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் பிரஜின். பொறுப்பான காவல் துறை அதிகாரி வேடம். போலீஸ் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ஹீரோக்களுக்குக் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும். இந்தப் படம் பிரஜினுக்கு அப்படி அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரஜின் மனைவியாக வித்யா பிரதீப், சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். மெடிக்கல் க்ரைம் என்றாலே அதில் டாக்டர்கள்தான் வில்லன்களாக இருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படி ஒரு டாக்டராக ராகுல் மாதவ். ஆரம்பம் முதல் அப்பாவியான டாக்டர் போல வந்து இவரா அப்படி செய்பவர் என அதிர்ச்சியடைய வைக்கிறார்.சிறிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் ரசிக்கலாம்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்று பார்த்தால் ஏமாற்றம் தராத படம்
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]