தமிழகத்தில் கொடிய நோயான கொரோனாவின் மூன்றாம் அலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது!
ஊரடங்கு என்று தெரிந்தும் மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சில கடைகள் திறந்து இருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு, கடைகளையும் மூட உத்தரவிட்டார்!