நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.இதன்படி ,நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை cuet.samarth.ac.in இல் சரிபார்க்கலாம். NTA ஆனது CUET-UG 2022 ஐ ஆறு கட்டங்களாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் 259 நகரங்களில் 489 மையங்களில் நடத்தியது.இத் தேர்வினை 9,68,201 பேர் எழுதினர்.