• Wed. Apr 17th, 2024

6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்- சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

Byகாயத்ரி

Sep 14, 2022

அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *