• Wed. May 21st, 2025

ஆணையாளரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நெல்லியாளம் அலுவலகத்தில் பணி புரியும் 15 நபர்களையும் பணியிலிருந்து நிறுத்திய ஆணையரை கண்டித்து ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லியாளம் பகுதியில் திமுகவை சேர்ந்த தலைவர், துணை தலைவர் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்ததால் நெல்லியாளம் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.