கொரோனா நம் முன் சவாலாக இருந்தாலும், அதனால், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் முதல் சிறிய விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகளில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி விவசாயி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 10வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.
பிரதமர் மோடி நிதியுதவியை விடுவித்தார். 10வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிதியுதவி வரவு வைக்கப்பட உள்ளது.நிதியை விடுவித்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் உள்கட்டமைப்பில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு புது பரிமாணம் அளிக்கும் வகையில், சிப் உற்பத்தி மற்றும் செமி கன்டக்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில், வரும் 2070 ம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்தலை நிறுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மின்சார வாகனங்கள் துறையில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த ஆண்டு பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ல் இருந்து 21 ஆக அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீடும் சாதனை படைக்கும் வகையில் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் பழைய சாதனைகளை உடைக்கிறது.
விவசாயம் மற்றும் ஏற்றுமதியில் புதிய முன்னுதாரணம் படைக்கப்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டானது கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா வலிமையாக போராடிய ஆண்டாக மட்டுமல்லாமல், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டாக உள்ளது. பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், நவீன உள்கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். கோவிட் சவாலாக இருந்தாலும், அதனால், நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
கொரோனாவிற்கு முன்பை காட்டிலும், பல அளவுகளில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.இந்த ஆண்டு நாடு 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அப்போது, புது வேகத்துடன் இன்னும் முன்னேறுவோம் என்ற நாட்டின் தீர்மானத்தின்படி புதிய பயணத்தை துவங்குவோம். கடந்த ஆண்டில் ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் 50 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படும் நிலையில், அதில் 10 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 6 ஆண்டுகளில் துவங்கப்பட்டவை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]