உதகை நகராட்சி பகுதிகளில் தரமற்ற நிலையில் பணிகளை மேற்க்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என நகரமன்ற சாதாரண கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் வேண்டுகோள்…
உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி தலைமையில், நகராட்சி ஆணையாளா காந்திராஜ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தெருவிளக்கு, நடைப்பாதை, குடிநீர், கழிப்பிட வசதி, மழை நீர் வடிகால், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் அபாயகரமான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நகரமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர்.நகர மன்ற துணை தலைவர் பேசிய போது சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உதகை மலை ரயில் நிலையம் முன்பு உள்ள இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் ஏழை, எளிய மக்கள் தகரத்தால் ஆன ஷெட்டுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பி வருவது குறித்து நகரமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.இக்கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]