• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பு

ByN.Ravi

Apr 5, 2024

மதுரை, வாடிப்பட்டி அருகே தனிச்சயம் பிரிவு பகுதிகளில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு செல்வப்பெருந்தகை தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கண்ணுடையால்புரம் மூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்தொடர்ந்து, அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தேனி மாவட்டத்தலைவர் முருகேசன் தேனி மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு தென் மண்டல தலைவர் பாதுஷா, உசிலம்பட்டி சீதாலட்சுமி, மாவட்டத் தலைவர் எஸ். சி. துறை ராஜா, எஸ்.சி .துரை மாநிலத் துணைத் தலைவர் சங்கர பாண்டி, வாடிப்பட்டி நகரத் துணைத் தலைவர் செல்லக்குளம் மணி சோழவந்தான் இளவரசன் உள்பட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, செல்வப் பெருந்தகை அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று அங்கு வாக்கு சேகரித்தார்.