• Wed. May 1st, 2024

விடியல் அரசு விடியலை தந்து விட்டதா! சிவகங்கை வேட்பாளர் சேவியர்தாஸ் கேள்வி?

ByG.Suresh

Apr 5, 2024

உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்.. ப.சிதம்பரமும், கார்த்திக் சிதம்பரம் என்ன செய்தார்? நீங்களே சொல்லுங்க..,

கூட்டத்தில் இருந்த அனைவருமே ஒன்னும் செய்யல என்று கோஷமிட்டனர். இந்த விடியல் ஆட்சி உங்களுக்கு விடியலை தந்ததா?

கூடியிருந்தவர்கள் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது. இதை கண்ட அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் மௌனம் மட்டுமே திமுக ஆட்சியில் தர முடியும். அதிமுக ஆட்சியில் அப்படி கிடையாது. அது உங்களுக்கே தெரியும் என்று தேவகோட்டை நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை சந்தித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளர் சேவியர் தாஸ் உடன் சிவகங்கை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன், தேவகோட்டை பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *