காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது.
பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட தேர்வுகளில் தகுதிபெற வேண்டும். இந்த நிலையில் தமிழக காவல்துறையில் 1990-1991ம் ஆண்டில் சிறப்பு உத்தரவின் பேரில் நேரடியாக 400 பெண்கள் முதல்நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 5 ஆண்டுகளில் தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.அதேபோல் சிறப்பு உதவி ஆய்வாளர் அதாவது எஸ்.எஸ்.ஐ. ஆக பணிபுரிய 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிலும் இவர்களுக்கு சிறப்பு சலுகையாக 18 ஆண்டுகளிலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இவர்கள் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு என்பது நல்ல விஷயம் என்றாலும் மற்றொரு தரப்பினர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

2010-2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக உதவி ஆய்வாளர்களாக பணிக்கு சேர்ந்து சுமார் 800க்கும் அதிகமானோர் ஆய்வாளர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 1991 ஆம் ஆண்டின் சிறப்பு பேட்ச்சை சேர்ந்த சிலர் பதவி உயர்வு பெற்ற வருடத்தை 2016ஆம் ஆண்டிற்கு பதிலாக 2011ஆம் ஆண்டாக ரெக்கார்டில் மாற்றியுள்ளனர். இதனால் உரிய சீனியாரிட்டி இல்லாமலே 10 ஆண்டுகள் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறி முறைகேடாக ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள் என பொய்யாக கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேட்டிற்கு காவல்துறையிலுள்ள சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
2010ஆம் ஆண்டு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றவர்கள் 10 ஆண்டுகள் அனுபவமின்றி எப்படி இன்ஸ்பெக்டராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ள 2011 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள், ஆய்வாளராக பதவி உயர்வு பெற தகுதி இருந்தும் இன்னும் 7,8 வருடங்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளாக தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு சிறப்பு பேட்சை சிலர் செய்த முறைகேட்டால் தாங்கள் காத்திருக்கும் நிலை இருக்கிறது என்று கூறும் அவர்கள், இந்த முறைகேடு குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு பல முறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியல் தயார் செய்து வரும் நிலையில், ஆய்வாளர்களாக தகுதியுடையவர்கள் பட்டியலில் முறைகேடு செய்தவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் சுமார் 900 பேர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவையும் நிர்வாக கூடுதல் காவல் தலைமை இயக்குனர் சங்கரையும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த முறைகேட்டிற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி… பொறுத்திருந்து பார்ப்போம்….
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]
- சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமதுரை மாவட்டம் […]
- தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி […]
- சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.கோடை காலம் துவங்கியுள்ள […]
- திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணைரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் […]
- சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், […]
- மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை […]
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியதுஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் […]
- ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை […]
- எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டிமதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் […]
- திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் […]
- ‘மை டியர் டயானா’ இணையத் தொடர் படப்பிடிப்பு துவக்கம்பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு […]
- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டிதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து […]
- ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க […]
- பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் […]