“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை ஆட்சி, கலைச்செல்வி இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மனோகரன், சத்யநாராயணன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சத்யா மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், புதியவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்தார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.