• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பள்ளத்தில் சிக்கிய கலெக்டர் வாகனம்

குமரி ஆட்சியர் அரவிந்த் நேற்று (0911.22) பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடுக்கரையை அடுத்த கேசவநேரி என்ற பகுதியில் அடுக்கு மாடி கட்டுவது சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டபோது மண் சாலையில் பயணித்த போது கடந்த சில நாட்களாக பெய்த கடுமையான மழை காரணமாக மண் சாலைப் பகுதியில் தண்ணீர் கிடந்த பள்ளத்தில் வாகனத்தின் இடது பக்க டயர் சிக்கியது. சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் ஆட்சியரின் வாகனத்தை தள்ளி சம பரப்பிற்கு கொண்டு வந்தனர். அதன் பின் திட்டமிட்டபடி. சம்பந்தப்பட்ட இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.