• Tue. Apr 30th, 2024

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 3 வது பொத்தானை அழுத்த சொல்லி “கை”சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17,18_வார்டு பகுதியில் இன்று மாலை (ஏப்ரல்-16)ம் தேதி மாலை. தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் 24_மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சி 17-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தாமஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள மகளிர் பிரிவு அமைப்பாளர் விஜயா, ஆனந்தி, ஜோதி, முத்துராமன், கண்ணன், மூர்த்தி உட்பட ஏராளமான கூட்டணி கட்சியினர்களும் 17_வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒவ்வொருவரையும் பார்த்து, வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 3 வது பொத்தானை அழுத்தவும். அப்போது “கை”சின்னத்தில் வாக்கு பதிவாகும் என சொல்லிக் கொடுத்ததுடன் அது குறித்த துண்டு பிரசூரத்தையும் கொடுத்து, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள். இதைப் போன்று 18-வது வார்ட் பகுதிகளான இரட்சகர் தெரு, வாவத்துறை பகுதிகளில் திமுகவை சேர்ந்த வார்ட் கவுன்சிலர் ஆட்லின்சேகர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரிடமும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசூரங்களை கொடுத்து. கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *