• Fri. Apr 26th, 2024

நான் அடிச்ச சரக்குல போதை ஏறல… உள்துறை அமைச்சருக்கு கடுதம் எழுதிய குடிமகன்…

Byகாயத்ரி

May 9, 2022

நாட்டில் பல பிரச்சனைகள் நிலவுகிறது. எங்கே பார்த்தாலும் எங்க ஏரியால தெருவிளக்கு இல்லை, தண்ணீர் இல்லை, ஏன் ஒரு படி மேல போய் பார்த்தால் சில பேருக்கு உணவு கூட கிடைக்காமல் இருக்கிறார்கள் அதுக்கு மனு கொடுக்க படாதபாடுபடுறாங்க. ஆனால் இதில் சில விச்சித்திர மனிதர்களும் உண்டு. என் செருப்ப காணோம், எங்க வீட்டுல வர தண்ணீர் ருசியா இல்ல, நான் அடிக்கிற சரக்குல போதை ஏறல-னு உள்துறை அமைச்சருக்கே கடிதம் எழுதிருக்காங்க… அப்படி சிரிப்பில் மற்றும் சிந்திப்பில் ஆழ்த்திய சம்பவம் தான் இப்போ பாக்க போறோம்.

மத்திய பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்ப்பவர் லோகேந்திரா சோதியா. இவர் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ராவிற்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி அருந்தினால் போதை ஏற மறுக்கிறது. இதனால் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி குடித்ததாகவும், ஆனால் மதுவில் போதை ஏறவில்லை என்றும், இதனால் அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த புகார் கடிதத்தை அவர் உள்ளூர் கலால் துறை அதிகாரிகளுக்கும், மாநில அமைச்சருகேகும் அனுப்பியிருக்கார்.

இதுமட்டுமில்லாமல் இதேபோல மத்திய பிரதேசம் தரோட் கிராமத்தை சேர்ந்த ஜித்தேந்திரா பக்ரி என்பவர் காவல்துறையினருக்கு ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய 180 ரூபாய் மதிப்புள்ள கருப்பு செருப்பு ஒன்று காணாமல் போய்விட்டது என்றும், ஒருவேளை அந்த செருப்பு கொலை, கொள்ளை குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டால் அந்த சம்பவத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்கூட்டியே தெரிவிப்பதாக கூறியிருந்தார்.எதுஎதுக்குலாம் கடிதம் எழுதுராங்கப்பா… இது தான் நாட்டின் வளர்ச்சியோ..??? அடுத்து என் வீட்டுல வச்சிருந்த சீப்பக்காணோம்-னு கூட சொல்லுவாங்க… உஷார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *