• Tue. Apr 23rd, 2024

கொரோனாவால் நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழந்தார்

Byமதி

Nov 29, 2021

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடன பயிற்சியாளராக பணியாற்றியவர் மாஸ்டர் சிவசங்கர் பாபா. இவர் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், ஆபத்தான நிலையில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் மட்டுமல்லாது இவரது மகன் மற்றும் மனைவிக்கும் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் நுரையீரல் கொரோனாவால் 75% பாதிப்பு அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *