பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நூலை பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கி வரவேற்றார்.
பொன்னியின் செல்வன் நூலை பிரதமருக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
