தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
மின்சார வாகனங்களுக்கு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாரிய இடங்களில் எங்கு சார்ஜிங் பாய்ண்ட அமைப்பது குறித்து இடத்தேர்வு நடந்து வருகிறது..மேலும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.