பொதுவினியோக முறை தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக த மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ரேசன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். மேலும் பொது விநியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.