திரையுலகில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ஜோடிகளின் பிரிவுகள் பலரின் மனதை கனக்கச்செய்தது.
சமந்தா-நாக சைதன்யா

ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவு என்றால் அது சமந்தா நாக சைதன்யாவின் பிரிவு தான். இருவரும் “யே மாய சேசவே” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். அவர்களது நட்பு காதலாக மாறியது. 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களை மலைக்க வைத்தனர்.அதன் பிறகு சந்தோஷமாக இவர்களது வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டதாக பல சோஷியல் மீடியாக்களில் செய்தி பரவின. பின் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரிந்தனர்.
பாலாஜி மோகன்- அருணா
]

‘வாயை மூடி பேசவும்’, மாரி, மாரி 2 போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி மோகன். 2012ம் ஆண்டு தனது பள்ளி காலத்தில் இருந்து வந்த நீண்ட நாள் தோழியான அருணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் அடிப்படையில் அவர்களது நட்பு பலனளிக்கவில்லை. அதன் பின் ஒரு வருடம் கழித்து அருணாவை விவாகரத்து செய்வதாக பாலாஜி மோகன் அறிவித்தார்.
டி இமான்-மோனிகா ரிச்சர்ட்

சூப்பர் ஹிட் காதல் பாடல்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். இவர் தற்போது தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டிடமிருந்து விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.13 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் டி இமானும், மோனிகாவும் இருவர் சம்மதத்துடன் விவாகரத்தை முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் பிளெசிகா கேத்தி மற்றும் வெரோனிக்கா டோரதி என்ற இரு மகள்கள் உள்ளனர்.பல காதல் பாடல்களுக்கு கைக்கொடுத்த டி இமானுக்கு திருமண வாழ்க்கை கைக்கொடுக்கவில்லை.
சுஷ்மிதா சென்- ரோஹ்மன் ஷால்

சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது காதலர் ரோஹ்மன் ஷாலை பிரிந்ததாக அறிவித்தார். இருவரும் மனதாரவே பிரிந்தனர். இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில்,” நாங்கள் நண்பர்களாக தொடங்கினோம்” நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்! ஆனால் காதல் அப்படியே இருக்கிறது. காதலில் விழுவது அழகானது. ஆனால் ஒரு சில சமயங்களில் தனித்தனி பாதையில் செல்ல வேண்டியிருக்கும்.சினிமா நட்சத்திரங்களும் மனிதர்கள் தான்.ஆனால் சில சமயங்களில் துரதிஷ்டமான சம்பவங்களையும் சந்திக்கிறார்கள். பிரபலங்களின் காதல் மற்றும் திருமணங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், அவர்களின் பிரிவு மற்றும் விவாகரத்துகள் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்கின்றன என மனமுறுக கூறியுள்ளார்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]