• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம்..,

கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சாத்தூர் எம்எல்ஏ கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் சம்பத் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வெம்பக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெய பாண்டியன், கிருஷ்ணகுமார்,…

அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர். மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று…

வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி..,

வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வெம்பக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டார நித்திய கல்யாணி…

கோவில் உண்டியல் உடைக்க முயற்சி..,

விருதுநகர் 14 வார்டில் உள்ள திருவள்ளூவர் தெருவில் உள்ள அருள் மிகு பத்திர காளி அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை சில மர்ம நபர்கள் நேற்று இரவு உடைக்க முயற்சி செய்துள்ளனர், கோவில் அருகில் படுத்து இருந்த ஒருவர் சத்தம் போடவே…

முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் ராஜுக்கள் கல்லூரி எதிரே அமைந்துள்ள அம்பேத்கர் நகர் இந்தப் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்த வருகின்றனர் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் 15 தினங்களுக்கு ஒரு…

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று அசத்தல்…

சிவகாசி லட்சுமி நகரில் வசிக்கும் தங்க மாரியப்பன்- கவிதா தம்பதியினர். தங்க மாரியப்பன் கட்டிடப் பொறியாளராக உள்ளார். இந்தத் தம்பதியரின் மகன்கள் இரட்டையர்களான துரைராஜு ராமன் மற்றும் துரை லட்சுமணன் இருவரும் சாட்சியாபுரம் வி.எஸ்.கே. டி நாடார் குருகுல மெட்ரிகுலேஷன் மேல்நிலை…

இயற்கை உபாதையை கழிக்க சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம்…,

சாத்துார் அருகே அன்பின் நகரத்தில் இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவருடன் சென்ற 2 வயது பெண் குழந்தை மாயமான நிலையில் கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடி வருகின்றனர். நடுச்…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சாத்தூர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தீர்மானம்.. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் சாத்தூர் K.K.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்…

விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளரை சந்தித்த தவெக தொண்டர்கள்..,

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக…

முதல்வர் விஜய் பெயரையும் என் பெயரையும் சொல்லிசெய்ய கூடாது -அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தல்..,

சிவகாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சிவகாசி அருகே செங்கமலாச்சியாபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றி…