• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்பு

  • Home
  • முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

நகங்கள் பளபளக்க

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு…

முகச்சுருக்கம் மறைய:

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவினால் முகச்சுருக்கம் மறையும்.

முகம் பளிச்சிட

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

முக அழகு மென்மையாக

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி…

முகச்சுருக்கம் மறைய

வைட்டமின் இ மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெயை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மாசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

கழுத்தில் கருவளையம் நீங்க

கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

கொள்ளு இட்லி

சாதாரண இட்லி மாவு-3கப்,கொள்ளு-1கப், கொள்ளை மட்டும் தனியாக 2மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து இட்லி கொப்பரையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்க

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

முகத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்க

ஒரு தக்காளியை கூழ் போல் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவி, இதை 15 நிமிடங்கள் உலர வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.