• Wed. Apr 24th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • முகச்சுருக்கம் மறைய:

முகச்சுருக்கம் மறைய:

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவினால் முகச்சுருக்கம் மறையும்.

முகம் பளிச்சிட

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

முக அழகு மென்மையாக

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி…

முகச்சுருக்கம் மறைய

வைட்டமின் இ மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெயை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மாசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

கழுத்தில் கருவளையம் நீங்க

கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

கொள்ளு இட்லி

சாதாரண இட்லி மாவு-3கப்,கொள்ளு-1கப், கொள்ளை மட்டும் தனியாக 2மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து இட்லி கொப்பரையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்க

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

முகத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்க

ஒரு தக்காளியை கூழ் போல் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவி, இதை 15 நிமிடங்கள் உலர வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.

சருமம் இளமையுடன் காட்சியளிக்க

மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.…

முகம் மென்மையாக

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.