அழகு குறிப்புகள்:
கண் எரிச்சல் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க: குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இப்படி செய்து…
அழகு குறிப்புகள்:
சருமத்திற்கு அழகு தரும் எலுமிச்சை:எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம்…
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:
பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து,…
கண்கள் பளிச்சிட:
ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் வழுவழுவென்று க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து…
முடி உதிர்வதைத் தடுக்க:
ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க – செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.
அழகு குறிப்பு! – வெயிலில் இருந்து சருமத்தை காத்திட..
வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்: வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி,…
மிருதுவான சருமத்திற்கு தேன் மற்றும் பாதாம் எண்ணெய்:
½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை…
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க:
தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பாதங்களில் தடவி வந்தால், பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.
கூந்தல் பட்டுப்போன்று மின்ன:
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
முகத்தில் உள்ள கருமை நீங்க:
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.




