• Thu. Apr 25th, 2024

ஓட்டு போட வாங்க ..நான் அழைக்கிறேன் – பிரதமர் மோடி

பஞ்சாப் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்க வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும்,2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதைப்போல்,பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் சற்று முன்னதாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.அதன்படி,இத்தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில்,பஞ்சாப் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“பஞ்சாப் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இன்று வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிக்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *