கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் பண்டிகைக்கு இந்த முறை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்ககர் பேட்டியளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது .இந்த சிறப்பு பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை கோயம்பேட்டில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் சிறப்பு பேருந்துகாக அமைக்கப்பட்ட விசாரணை மையம் மற்றும் அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.மேலும் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளிடம் நேரடியாக சென்று பேருந்துகளின் இயக்கம் குறித்து விசாரித்தார்.தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் :
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து மாதவரம் பேருந்து நிலையம் கலைஞர் கருணாநிதி நகர் தேர்தல் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பைபாஸ் பெயர் புரட்சித்தலைவி டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.நேற்றைய தினம் சென்னையில் இருந்து சராசரியாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட அதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
இன்று மாலை 7 மணி நிலவரப்படி 1544 பேருந்துகளும் 1855 சிறப்பு பேருந்துகளில் 904 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.மொத்தமாக 12 13 ஆகிய இரண்டு தேதிகளில் 5134 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
நாளை தினசரி 20100 பேருந்துகளுடன் 1943 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை விட 1949 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு 16 முதல் 18 தேதி வரை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.எந்த ஆண்டும் இல்லாத மாதிரி இந்த ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம் அரியலூர் செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் புகார் குறித்து 95 பேருந்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றில் ஒன்பது பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இந்த முறை அதிக புகார் கட்டணம் எதுவும் வராமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.சென்னையில் இரவு நேரங்களில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட சென்னை ஆப் செயலி மூலம் முன்பதிவு செய்து விரைவு பேருந்து எஸ்இடிசி பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எந்த இடத்தில் பயணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக லிங்க் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]