• Fri. Jan 17th, 2025

துணிக்கடை முன்பு அணிவகுத்து நிற்கும் காளைகள்

Byவிஷா

Jan 8, 2025

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடை முன்பாக ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெருமைகளைக் கூறும் விதமாக கடையின் உரிமையாளர், 5 வகையான ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்திருக்கும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து காளைகளானது கொண்டு வரப்படும்.
கோவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பிரபல துணிக்கடை முன்பாக நிற்க வைக்கப்பட்டுள்ள ஜல்லிகட்டு காளைகளை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாகவும், ஜல்லிக்கட்டு காளைகளின் சிறப்புகளை கூறும் வகையில் கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளர் ஐந்து வகையான ஜல்லிகட்டு காளைகளை தன் கடை முன்னே நிறுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது கடை முன்பாக வாடிவாசல் போல பந்தல் அமைத்து அதனுள்ளே கண்ணை கவரும் தேனி ஐஸ் மறை, காரியாபட்டி மறை, காங்கேயம் காரி, புலிகுளம் செம்மால், காங்ரஜ் ராஜஸ்தான் எனும் ஐந்து இன ஜல்லிக்கட்டு காளைகள் அலங்காரங்களுடன் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் உட்பட பொதுமக்கள் பிரம்மாண்டமாக திமிலுடன் நிற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.