அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைக்க கோரி இலவச சட்ட உதவி சங்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்குட்பட்ட பஜார் 3வது தெருவில் கவராம் என்பவரது மகன் G. ராஜி என்பவர் அரசு அனுமதி இன்றி 3 அடுக்குமாடி கட்டிடம் கட்டியுள்ளார்.இந்தக் கட்டிடம் ஆனது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் அதை உடனே விரைந்து அகற்ற வேண்டும் என்றும் இலவச சட்ட உதவி சங்கத்தின் நிறுவன தலைவர் A.P. ராஜா தலைமையில் பொதுமக்கள் கோரிக்கையாக புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த புகாருக்கு நகராட்சி அதிகாரிகள் தாமதப்படுத்தியதால் இலவச சட்ட உதவி அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியல் செய்ய போவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர் உடனே நகராட்சி அதிகாரிகள் கடந்த 20.1.23ம் தேதியன்று அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர் .
மீண்டும் நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் உள்ள சீலை 08.02.23ம் தேதியன்று அகற்றினார்கள் ஏன் சீலை அகற்றினீர்கள் என்று நகராட்சி அதிகாரிகளிடம் 06.3.23ம் தேதியன்று சட்ட உதவி அமைப்பினர் நேரில் சென்று கேள்வி எழுப்பியதற்கு G. ராஜு என்பவர் அரசு ஆணை முதன்மை செயலாளரிடம் தனது பொருட்களை எடுக்க 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று அனுமதி வாங்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பாக A.P ராஜா தலைமையில் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.
செய்தியாளர்கள் சந்தி போது (A.P. ராஜா):
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அரசு அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 10 நாட்கள் கால அவகாசம் கடந்து 1 மாத காலம் கடந்தும் அந்தக் கட்டிடம் இன்னும் சீல் வைக்கப்படவில்லை மீண்டும் இன்று எனது தலைமையில் பொதுமக்கள் மற்றும் எங்களது அமைப்பினர் சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் சீல் வைக்க கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் இனிமேலும் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஆவடி நகராட்சியை பொதுமக்களுடன் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த போகின்றோம் என்று கூறினார்.
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]
- காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் […]
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]