• Thu. Apr 18th, 2024

மாலத்தீவில் தீ விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு

மாலத்தீவில் தீ விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 10-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் இருந்த வாகன பழுதுபார்க்கும் கடையில் பிடித்த தீ மேல்தளத்திலும் பரவி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மேல்தளத்தில் தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். 8 இந்தியர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இந்தியர்களில் 3 பேர் தமிழர்கள் ஆவர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தீவிரப்படுத்தியது. இதன் பயனாக நேற்று 8 உடல்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், மாலத்தீவில் நடந்த துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் பலியான 8 இந்தியர்களின் உடல்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு உதவிய மாலத்தீவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *