• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசிய சிறையில் வாடும் 3 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: காங்கிரஸ் கோரிக்கை

இந்தோனேசிய சிறையில் வாடும் 3 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் விஸ்வாஸ் சப்கலை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி அந்தமானில் இருந்து மீன் பிடிக்க எந்திர படகில் சென்றனர். அவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்ததாக கடந்த மார்ச் 7-ந்தேதி, இந்தோனேசிய கடற்படை கைது செய்தது. படகை பறிமுதல் செய்தது. அவர்களில் 4 மீனவர்கள் ஏப்ரல் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். ஜெசின் தாஸ் என்ற மீனவர், சித்ரவதை காரணமாக உயிரிழந்தார். எனவே, இந்தோனேசிய சிறையில் வாடும் மீதி உள்ள 3 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.