சிவகாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு அரிசிப்பை மற்றும் சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார்.

அருகில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தொழிலதிபர் தங்கமுனியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. கார்த்திக் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு 5 கிலோ அரிசி, பழங்கள் வழங்கினார்.





