உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் முறையில் நடத்த பாஜக தயாராகிறது.
இது, அதிகரித்து வரும் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் எனக் கருதப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுமா எனும் கேள்வி தொடர்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலையின் பரவல் காரணத்தால் தீவிரக் கட்டுப்பாடு களுடன் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், முக்கிய தேசியக் கட்சியாகி விட்ட பாஜக டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தயாராகிறது. 3டி எனப்படும் முப்பரிமாண வடிவில் இணையதளம் வழியாக தங்கள் தலைவர்களின் பிரச்சாரம் தொடர வழி வகுத்துள்ளது.
இது குறித்து உபி மாநில பாஜகவின் அமைப்பாளர்களில் ஒருவரான காமேஷ்வர் மிஸ்ராகூறும்போது, ‘நவீன டிஜிட்டல் முறையில் இரண்டு வேறு இடங்களில் உள்ள நம் தலைவர்களை ஒரே மேடையில் பேசுவது போல்காட்ட முடியும்.
இந்த உரையை ஒரே சமயத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் கைப்பேசிகள் வழியாக ஒளிபரப்ப முடியும். இதற்கான மாதிரிக் கூட்டங்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்தார்.
இந்த வகையிலானப் பிரச்சாரங்களை மாநிலத்தின் தலைநகரில் இருந்தபடி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பாஜகவின் ஐ.டி தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தங்கள் கட்சியினரில் சுமார் மூன்று லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தஇணையதளக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்காக சிறப்பு செயலிகளும்பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முறை பிரச்சாரங் களை ஜனவரி 10-ம் தேதிக்கும் பிறகு துவக்க பாஜக தலைமை உத்தரவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அரசியல் கட்சிகளில் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் டிஜிட்டல் முறை பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி முதலில் தொடங்கியது. இதன் பலனாக அக்கட்சிக்கு டெல்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனினும், இதேமுறையை ஆம் ஆத்மியைவிடத் தீவிரமாக பாஜக 2014 மக்களவை தேர்தல் முதல் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]
- சோழவந்தானில் எம் வி எம் மருது பெட்ரோல் பங்க் திறப்பு விழாமதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..,எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமியை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் […]
- சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய […]