• Sat. Apr 20th, 2024

பாஜக எம்.எல்.ஏ பதவி ராஜினாமா..!

நர்கட்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ ரஷ்மி வர்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பீகாரில் தற்போது பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நர்கட்டியா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான ரஷ்மி வர்மா இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தனது பதவி விலகலுக்கு தனிப்பட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.ஏ ரஷ்மி வர்மா கையில் உள்ள கடிதம் 2022 ஜனவரி 9 ஆம் தேதி எம்எல்ஏவின் லெட்டர் பேடில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் அடங்கிய அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *